இந்த பதிவுக்கு "நக்கீரன் அட்டைப்படமும் சில கேணக்கிறுக்கனுங்களும்" என்று தலைப்பு வைக்கத்தான் நினைத்தேன். அந்த அளவுக்கு சில நண்பர்களின் பதிவுகள் உள்ளன.
சத்யம் திரையரங்கில் முதல்வன் திரைப்படத்தில் முதல்வனே பாடல் ஓடிக்கொண்டிருக்கும்போது, என்னருகில் ஒருத்தர் அடித்த கமெண்ட் "என்ன மாப்ளே! லூசுத்தனமா எடுத்திருக்கானுங்க..இவ்ளோ பெரிய பாம்பு இந்தியாவிலேயே இல்லையே".
இந்த கமெண்ட் அடித்தவர்கள்தான் பதிவுலகில் உலாவருகிறார்களோ என்ற சந்தேகத்தை ஒதுக்க முடியவில்லை. யாரோ சொன்னமாதிரி, தமிழனுக்கு நகைச்சுவை உணர்வு குறைந்துவிட்டது என்பது உண்மைதான் போலும்.